ஆப்நகரம்

இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா?: வியக்க வைக்கும் திரௌபதி ஷீலா

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று இல்லை என ஷீலா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Oct 2020, 3:05 pm
அழகிய தமிழ் மகள் தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷீலா ராஜ்குமார் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஃபஹத் ஃபாசிலின் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் ஷீலா ராஜ்குமாரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் திரௌபதி.
Samayam Tamil sheela rajkumar


தன் கெரியர் பற்றி ஷீலா ராஜ்குமார் கூறியதாவது,

நான் நடித்த மலையாள படமான கும்பளங்கி நைட்ஸுக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. நான் தற்போது 6 படங்களில் நடித்து வருகிறேன். இரண்டு படங்கள் லாக்டவுன் நேரத்தில் ரிலீஸாகியிருக்க வேண்டியது. மற்ற 4 படங்களின் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

நான் நடித்து வரும் படங்கள் அனைத்தையும் புதுமுகங்கள் இயக்குகிறார்கள். அதனால் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கிறது. இது போன்ற படங்களில் நடிப்பது என் பாக்கியம் என்று நினைக்கிறேன். நான் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அதனால் நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கவே விரும்புகிறேன். டூ லெட் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் பார்த்த போது மோகன்லாலின் மேனேஜர் என்னை கும்பளங்கி நைட்ஸில் நடிக்க வைக்க விரும்பினார்.

அந்த கதாபாத்திரத்திற்கு பல பிரபல மலையாள நடிகைகள் எல்லாம் ஆடிஷனில் கலந்து கொண்டார்கள். ஆனால் இயக்குநருக்கு திருப்தி இல்லை. நான் ஆடிஷனில் கலந்து கொண்ட அன்றே தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு அந்த படத்தில் வசனம் மிகவும் குறைவு. முக பாவனைகள் தான் அதிகம்.

நான் ஹீரோயினாக மட்டும் நடிப்பதில் ஆர்வமாக இல்லை. நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதே சமயம் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் ஆசையும் உள்ளது. வலுவான கதை உள்ள படங்களில் நடிக்க நான் தயார். தரமான படங்கள் தான் எனக்கு தேவை.

மண்டேலா படத்தில் நான் யோகி பாபுவின் ஹீரோயினாக நடித்துள்ளதில் மகிழ்ச்சி. யோகி பாபு காமெடியன் போன்று தெரிந்தாலும், அவருக்குள் ஒரு ஹீரோவை நான் பார்த்தேன். அவர் உங்களை சிரிக்க வைப்பார், அழவும் வைப்பார். அவருடன் சேர்ந்து நடித்தபோது நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.

மானம் இல்லாதவருடன் சண்டையிட்டால் நம் மானம் போய்விடும்: வனிதாவை சொல்கிறாரா லக்ஷ்மி ராமகிருஷ்ணன்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்