ஆப்நகரம்

Bigil: தளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்!!

தளபதி விஜய்க்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் குவிந்திருக்க அவரது வீட்டினில் இருந்து ரசிகர்களின் கடிதம் வந்துள்ளது.

Samayam Tamil 29 Aug 2019, 5:39 pm
அட்லி இயக்கத்தில் பிகில் படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கூடியவிரைவில் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தளபதி விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். பிகில் படத்திற்கு அதில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து, விகடன் குழுமத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மகனுக்கு எழுதிய கடிதம் குறித்து தெரிவித்துள்ளார். அந்த கடிதம் விகடன் சினிமா பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.. தற்போது அந்தக் கடிதம்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சினிமா ஆர்வலர்களும் அந்த கடிதத்தை வெளியிட்டு வருகின்றனர்.
Samayam Tamil Shoba Chandrasekhar


அந்த கடிதம் இதோ..,

"ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.

இதையும் படிங்க: Karthi: அச்சச்சோ.. தீபாவளிக்கு இத்தனை படங்களா? கார்த்தியின் கைதி ரிலீஸ் தேதி அறிவிப்பு!


நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.

மேலும் படிக்க: காதலரை பிரிந்து இலியான செய்த அதிரடி காரியம்!

அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியில் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிக்கையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

Also Read This: தெலுங்கு ஹிட் இயக்குநருடன் மீண்டும் சாய் பல்லவி!

நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் சுருங்கக்கூறின் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்..."

இப்படிக்கு,
ஷோபா சந்திரசேகர்
தாய் / ரசிகை

என்று எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விகடன் நேர்காணல் செய்து வெளியிட்ட இந்த செய்திக்கு நன்றி.

பிகில் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய், மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 64 படத்தில் நடிக்கிறார். வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்