ஆப்நகரம்

15 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் சுரேஷ் கோபி - ஷோபனா!

நடிகர் சுரேஷ் கோபியும், நடிகை ஷோபனாவும், 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.

Samayam Tamil 12 Apr 2019, 3:23 pm
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஷோபனா. அப்போது இவருக்கு மலையாளத்திலும் நல்ல மார்க்கெட் இருந்தது. நடிகை ஷோபனா பழம்பெரும் நடிகை பத்மினியின் பேத்தியும்கூட. இவர் பரத நாட்டியத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
Samayam Tamil suresh-gopi


இவர் 2014ல் கடைசியாக நடித்த படம் ‘கோச்சடையான்’ மேலும் இவர் ஜோடி நம்பர் சீசன் 4ல் கலந்து கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை ஷோபனா, முழுநேர பரதக்கலை ஆசிரியராக மாறிவிட்டார். திருமணம் செய்துகொள்ளாமலேயே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதிகமான மலையாள படங்களில் நடித்த ஷோபனா பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஷோபனா நடிக்கிறாராம்.

இந்தப் படத்தில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கிறார். 2005ல் வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த பிறகு 15 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்