பிரபல தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணத்தால் இன்று நடைபெறவிருந்த வெற்றிவிழா நிகழ்ச்சியை தீரன் படக்குழு ஒத்தி வைத்துள்ளது.
நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினரும், அவர் கம்பெனியின் மேனேஜருமான அசோக்குமார் சினிமா பைனான்சியரின் கெடுபிடியை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இவரின் இந்த தற்கொலை செய்தி சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கௌதம் மேனன் உள்பட முன்னணி பிரபலங்கள் நிறைய பேர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளரின் அசோக்குமார் மரணத்தால் இன்று வெற்றி விழா கொண்டாட இருந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழுவினர் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். அதோடு நிவின் பாலி தமிழில் அறிமுகமாகும் ‘ரிச்சி’ படத்தின் பிரஸ் மீட்டும் இன்று நடப்பதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினரும், அவர் கம்பெனியின் மேனேஜருமான அசோக்குமார் சினிமா பைனான்சியரின் கெடுபிடியை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இவரின் இந்த தற்கொலை செய்தி சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கௌதம் மேனன் உள்பட முன்னணி பிரபலங்கள் நிறைய பேர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளரின் அசோக்குமார் மரணத்தால் இன்று வெற்றி விழா கொண்டாட இருந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழுவினர் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். அதோடு நிவின் பாலி தமிழில் அறிமுகமாகும் ‘ரிச்சி’ படத்தின் பிரஸ் மீட்டும் இன்று நடப்பதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.