ஆப்நகரம்

ஏ.ஆர்.முருகதாஸ் மீது உதவி இயக்குனர் போலீசில் புகார்!

ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உதவி இயக்குனர் அன்பு ராஜசேகர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Samayam Tamil 6 Dec 2018, 5:02 pm
காப்புரிமை சட்டத்தின் படி ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உதவி இயக்குனர் அன்பு ராஜசேகர் போலீசில் புகார் செய்துள்ளார்.
Samayam Tamil ஏ.ஆர்.முருகதாஸ் மீது உதவி இயக்குனர் போலீசில் புகார்!
ஏ.ஆர்.முருகதாஸ் மீது உதவி இயக்குனர் போலீசில் புகார்!


கடந்த தீபாவளியன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. இந்தப் படம் வெளியான போது இந்தப் படத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்தது. ஒருவர் ‘சர்கார்’ படக்கதை என்னுடையது என்று உரிமை கோரினார். அந்த பிரச்னை முடிவதற்குள் ஆளுங்கட்சியினர் பிரச்னை செய்தனர். இந்த எல்லா சோதனைகளுக்குப் பின்னரும் ‘சர்கார்’ படம் சாதனை படைத்தது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்குமாறு உதவி இயக்குனர் அன்பு ராஜசேகர் என்பவர் தற்போது வளசாவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

அவர் அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

‘‘நான் இயக்கிய ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை திருடி அதை ‘கத்தி’ திரைப்படமாக எடுத்துள்ளார் திரு ஏ.ஆர். முருகதாஸ். அதனால் அவர் மீது காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் காவல் உதவி ஆணையர், அன்பு ராஜசேகர் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்