ஆப்நகரம்

கோலிவுட்காரங்க நல்லவங்க இல்ல, கீழ்தரமாக விமர்சிச்த கர்நாடகக்காரி!

தமிழில் நடித்து பிரபலமாகி விட்டு, பின்பு கோலிவுட் சினிமாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Samayam Tamil 9 Apr 2018, 3:06 pm
தமிழில் நடித்து பிரபலமாகி விட்டு, பின்பு கோலிவுட் சினிமாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
Samayam Tamil milan-talkes


கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் ‘யூடர்ன்’ என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானார். அதையடுத்து ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். மேலும் தற்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் ‘மிலன் டாக்கீஸ்’ என்ற பாலிவுட் படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் படத்தில் நடித்துவிட்டு இந்தி படத்தில் நடிப்பது குறித்து கேட்டதற்கு அதற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத், “எனக்கு பெரிய வித்தியாசம் தெரிகிறது. பாலிவுட் சினிமாவில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர்” என கூறியுள்ளார். இப்படி இவர் பேட்டியில் கூறியிருப்பது கோலிவுட் சினிமாக்காரர்களை அவமதிப்பதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்