ஆப்நகரம்

15 வருடங்கள் கழித்து இதை குடிக்கிறேன்: ஸ்ருதிஹாசன் ரியாக்ஷனுக்கு இது தான் காரணம்

15 வருடங்கள் கழித்து தான் முதல்முறையாக காபி குடித்ததாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Apr 2020, 4:58 pm
பிசியாக இயங்கிக்கொண்டிருந்த சினிமா நடிகர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். மேலும் அவர்கள் தங்கள் வீட்டில் செய்யும் பல்வேறு விஷயங்களை வீடியோவாக புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Samayam Tamil Shruti Haasan drinks coffee after 15 years


இத்தனை வருடங்களாக செய்ய நேரம் இல்லாமல் போன பல விஷயங்களையும் தற்போது அவர்கள் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசன் தான் சுமார் 15 வருடங்கள் கழித்து தற்போது காபி குடிக்க ஆரம்பித்திருப்பதாக கூறியுள்ளார். குடித்தபோது அவரது முகத்தில் மோசமான ரியாக்ஷன் தான் இருக்கிறது. அதை புகைப்படமே எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர்.

"15 வருடங்கள் கழித்து மிக சிறிய அளவிலான காபியை குடிக்க ஆரம்பித்திருக்கிறேன். மிக விசித்திரமாக உணர்கிறேன். நன்றாக ஆனால் மோசமாக வகையில் உணர்கிறேன், அதனால் மீண்டும் matchaவுக்கு மாறிவிட்டேன்" என ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram #MOOD ☕️ps- I’ve started drinking teeny tiny amounts of coffee for the first time in maybe 15 years. I feel very strange.. in a good but mostly bad way lol back to my matcha #matchamadeinheaven 💚 A post shared by @ shrutzhaasan on Apr 16, 2020 at 1:32am PDT

மேலும் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் 'தென்பாண்டி சீமையிலே' பாடலை தனது குரலில் வித்யாசமாக பாடி வீடியோ வெளியிட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஸ்ருதி ஹாசன் அடுத்து தமிழில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அவர். அது மட்டுமின்றி தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் கிராக் என்ற படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மே மாதம் துவக்கத்தில் வெளியாகவிருந்து அந்த படம். ஆனால் கொரோனா பிரச்சனை முழுமையாக முடிந்த பிறகு தான் கிராக் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்