ஆப்நகரம்

Samantha: அதுக்கு நான் பொறுப்பில்ல: வில்லங்க ட்வீட் பற்றி சித்தார்த் விளக்கம்

சமந்தா தன் விவாகரத்து குறித்து அறிவித்த வேகத்தில் ஏமாற்றுபவர்கள் பற்றி போட்ட ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 13 Oct 2021, 1:45 pm
ஏமாற்றுபவர்கள் பற்றி போட்ட ட்வீட்டை சமந்தா விவாகரத்துடன் ஒப்பிடப்பட்டது குறித்து சித்தார்த் விளக்கம் அளித்திருக்கிறார்.
Samayam Tamil siddharth explains about cheaters tweet
Samantha: அதுக்கு நான் பொறுப்பில்ல: வில்லங்க ட்வீட் பற்றி சித்தார்த் விளக்கம்


சமந்தா

சமந்தாவும், காதல் கணவர் நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிந்துவிட்டதை அக்டோபர் மாதம் 2ம் தேதி சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் சித்தார்த் போட்ட ட்வீட் வைரலானது. பள்ளியில் ஒரு ஆசிரியரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட முதல் பாடங்களில் ஒன்று... ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள். உங்களின் பாடம் என்ன என்று ட்வீட்டினார்.

சித்தார்த்

சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்தவர்கள் அவர் தன் முன்னாள் காதலியான சமந்தாவை பற்றி தான் பேசுகிறார் என்றார்கள். சமந்தா ரசிகர்களோ சித்தார்த்தை விளாசினார்கள். சமந்தாவே விவாகரத்து கஷ்டத்தில் இருக்கும்போது அவரை இப்படி குத்திக்காட்டுகிறாரே சித்தார்த். உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று சமந்தா ரசிகர்கள் கேட்டனர்.

விளக்கம்

சர்ச்சை ட்வீட் குறித்து சித்தார்த் கூறியிருப்பதாவது, நான் எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறேன். நான் தினமும் ட்வீட் செய்கிறேன். அதை வேறு ஏதாவது விஷயத்துடன் இணைத்து பேசுவது மக்களின் விருப்பம். பள்ளியில் ஆசிரியர் எனக்கு சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதை தான் ட்வீட் செய்தேன். அதை எதையுடனாவது இணைத்து பார்க்க மக்கள் விரும்பினால் அதற்கு நான் பொறுப்பில்லை என்றார்.

ரசிகர்கள்

தான் யாரையும் குத்திக்காட்டி ட்வீட் செய்யவில்லை என்று சித்தார்த் இரண்டாவது முறையாக விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் அவர் சமந்தாவுக்காக தான் அப்படி ட்வீட் போட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். ட்வீட் செய்துவிட்டு தற்போது சப்பை கட்டு கட்டுகிறார் என்று சமந்தா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்