ஆப்நகரம்

Santhanam: மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிம்பு: கதாநாயகனாகும் காமெடி நடிகர்!

நடிகர் சிம்பு இயக்குனர் அவதாரம் எடுத்த படம் வல்லவன். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிம்புவுக்கு மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

Samayam Tamil 28 May 2019, 7:21 pm
நடிகர் சிம்பு இயக்குனர் அவதாரம் எடுத்த படம் வல்லவன். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிம்புவுக்கு மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
Samayam Tamil Simbu (2)


வல்லவன் படத்தை இயக்கி நடித்த போது, இவ்வளவு சிறிய வயதில் அவரின் தந்தையைப் போல அனைத்து திறமைகளும் சிம்புவிடம் உள்ளதே என பலரும் வியந்தனர்.

மீண்டும் இயக்குனர்:
வல்லவன் படத்தில் சந்தானம் உடன் நடித்திருந்தாலும், அடுத்து சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் அறியப்பட்டார்.

வல்லவன் படத்தை தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்பு சந்தானத்தை வைத்து படத்தை இயக்க உள்ளார்.



ஹீரோவான பிறகு காமெடியனாக நடிக்க விரும்பாத சந்தானம், சிம்புவுக்காக தன் கொள்கையை தளர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சிம்பு ஹன்சிகாவின் மஹா படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கப் போகிறார்.

இருவரும் கையில் உள்ள படத்தை முடித்த பின்னர் அடுத்தாண்டு சிம்பு புதிய படத்தை இயக்கலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்