ஆப்நகரம்

மன்மதனுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சிம்பு, ஜோதிகா!

நடிகர் சிம்புவும், நடிகை ஜோதிகாவும், பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது ராதாமோகன் இயக்கி வரும் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

Samayam Tamil 9 Jul 2018, 6:14 pm
நடிகர் சிம்புவும், நடிகை ஜோதிகாவும், பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது ராதாமோகன் இயக்கி வரும் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
Samayam Tamil katrin mozhi


நடிகை ஜோதிகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். அப்போது அவர் ‘மன்மதன்’ படத்திலும், ‘சரவணா’ படத்திலும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் சிம்புவுடன் ஜோதிகா நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அந்த எண்ணம் நிறைவேறவில்லை.

இந்நிலையில் நடிகர் சிம்பு, ஜோதிகா நடித்து வரும் படத்தில் தற்போது கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். ‘நாச்சியார்’ படத்தை அடுத்து ஜோதிகா தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா உட்பட பலர் காட்சியளிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்