ஆப்நகரம்

இயக்குனர் நெல்சனின் தந்தை காலமானார்!

‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சனின் தந்தை நேற்றிரவு சென்னையில் காலமானார்.

Samayam Tamil 27 Nov 2018, 6:56 pm
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் முதன் முதலாக நடிகர் சிம்புவை வைத்து தொடங்கிய ‘வேட்டை மன்னன்’ படம் பாதியிலேயே நின்று போனது. இரண்டாவதாக இயக்கிய படம்தான் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil simbu


இந்நிலையில் நெல்சனின் தந்தை நேற்றிரவு காலமானார். அவரின் மரண செய்தி அறிந்த சிம்பு உடனே நெல்சனின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரின் நண்பர் மகத் ராகவேந்திராவும் சென்றிருந்தார். அவர்கள் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்