ஆப்நகரம்

Maanaadu மாநாடு மாஸ் அப்டேட்: ஆனால் டென்ஷன், கவலையில் சிம்பு ரசிகர்கள்

மாநாடு பட ஷூட்டிங் குறித்த அறிவிப்பை பார்த்த சிம்பு ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர்.

Samayam Tamil 7 Feb 2020, 11:48 am
மாநாடு பட ஷூட்டிங் குறித்த அறிவிப்பை பார்த்த சிம்பு ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர்.
Samayam Tamil simbu fans cant wait till february 19th
Maanaadu மாநாடு மாஸ் அப்டேட்: ஆனால் டென்ஷன், கவலையில் சிம்பு ரசிகர்கள்


மாநாடு ஷூட்டிங்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் இறுதியில் துவங்கும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சிம்புவின் பிறந்தநாள் அன்று ஷூட்டிங் என்றார்கள். இந்நிலையில் தான் மாநாடு படப்பிடிப்பு வரும் 19ம் தேதி பிரமாண்டமாக துவங்க உள்ளது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். அறிவிப்பை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் லைட்டா டென்ஷனிலும் உள்ளனர்.

பதட்டம்

மாநாடு படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிக் கொண்டே போவதால் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கவலையாக உள்ளது. 19ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் வரை இந்த பதட்டம் இருக்கத் தான் செய்யும். முன்னதாக மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதன் பிறகு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவார் என்று அவரின் அம்மா உஷா உத்தரவாதம் அளித்த பிறகே பட வேலைகள் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

மாநாடு படப்பிடிப்பு துவங்கும் தேதியை அறிவித்தால் மட்டும் போதாது சொன்ன தேதியில் வேலையை துவங்க வேண்டும் என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். மாநாடு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்பதில் சிம்புவை விட அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மாநாடு படத்தில் சிம்புவை தவிர வேறு யார் நடித்தாலும் நன்றாக இருக்காது என்பது ரசிகர்களின் கருத்து.

சிம்பு

மாநாடு படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார். படத்தில் அவர் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைக்கும் வேலையை துவங்கிவிட்டார். இதற்கிடையே அம்மா பேச்சை தட்டாதவர் சிம்பு என்பதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்