ஆப்நகரம்

சிம்பு படத்தை பாதியில் விட்டுவிட்டு அடுத்த படத்திற்கு தயாரான இயக்குனர்

சிம்பு நடித்துவந்த முஃப்டி ரீமேக் படம் பாதியில் நிற்கும் நிலையில், இயக்குனர் நார்தன் கேஜிஎப் ஹீரோ யாஷுக்காக கதை எழுதி வருகிறார்.

Samayam Tamil 5 May 2020, 11:44 am
கன்னடத்தில் ஸ்ரீமுரளி மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் 2017ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் முஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் சென்ற வருடம் துவங்கியது.
Samayam Tamil Simbu and Gautham Kartihk


கன்னடத்தில் இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இயக்குகிறார். ஷூட்டிங் துவங்கி முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில் அதன் பிறகு சிம்பு கால்ஷீட் ஒதுக்காததால் ஷூட்டிங் மீண்டும் துவங்கவில்லை.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் சிம்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தடைபட்ட ஷூட்டிங் தற்போதுவரை துவங்காமல் இருக்கிறது. சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார். அதுவும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

லாக்டவுன் முடிந்தாலும் சிம்பு மாநாடு படத்தில் தான் நடிப்பார். இதனால் முஃப்டி ரீமேக் ஷூட்டிங் துவங்குவது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் நார்தன் தனது அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎப் பட ஹீரோ யஷ் உடன் நார்தன் அடுத்து கூட்டணி சேர்கிறார் என்றும் அதற்காக முதற்கட்ட பணிகளை செய்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது. கேஜிஎப் 2 இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அடுத்து யஷ் நார்தன் இயக்கத்தில் தான் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்