ஆப்நகரம்

இருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு: திரும்பி வந்ததும் 'மாநாடு' தான்

சிம்பு சபரிமலைக்கு கிளம்பியபோது எடுகப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Dec 2019, 10:48 am
சிம்பு சபரிமலைக்கு செல்ல மாலை போட்டு 40 நாட்கள் விரதம் இருந்தார். இந்நிலையில் அவர் சபரிமலைக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அவர் திங்கட்கிழமை மாலை கிளம்பியுள்ளார். முன்னதாக பூஜை நடந்துள்ளது.
Samayam Tamil simbu


அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சபரிமலையில் இருந்து திரும்பி வந்ததும் அவர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கிறாராம்.

மாநாடு படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக அவர் மாநாடு படத்தில் நடிக்க வசதியாக வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு வந்தார். ஆனால் அவர் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்: பிகிலுக்கு மட்டும் கிடைத்த கவுரவம்

அதன் பிறகு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிம்புவை வைத்தே மாநாடு படத்தை எடுப்பது என்று முடிவு செய்துள்ளனர். சிம்பு பிரேக்கே இல்லாமல் மாநாடு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

அவர் எந்த பிரச்சனையும் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து நடிப்பார் என்று சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் வாக்குறுதி அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தான் மாநாடு படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்களின் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

பகவதி அம்மனை அடுத்து திருச்செந்தூர் முருகனை தரிசித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

இதற்கிடையே சிம்பு பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் தலைவன் கெளம்பிட்டான்யா, கெளம்பிட்டான்யா என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்