ஆப்நகரம்

ஐஸ்வர்யா வெளியே வந்தவுடன் இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ளார் நடிகர் சிம்பு!

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த நடிகை ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் சிம்பு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தரவுள்ளாராம்.

Samayam Tamil 28 Sep 2018, 3:32 pm
பிக்பாஸ் இந்த வாரம் ஞாயிறன்று முடிவுக்கு வரவுள்ளது. அன்று போட்டியாளர்களில் டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த பல வாரங்களுக்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டியவர். பிக்பாஸின் முழு ஆதரவால் இறுதி வரை சென்றுவிட்டார். அவர் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் அவரை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்ல என்ன பின்னணி என்று யாருக்கும் புரியவில்லை
Samayam Tamil aishwarya_dutta_str


இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த சென்றாயன், ஐஸ்வர்யாவிடம், ‘தான் வெளியே சென்றதும் சிம்புவை சந்தித்ததாகவும், ஐஸ்வர்யாவை பற்றி அவர் அதிகம் விசாரித்ததாகவும், சிம்பு தனது அடுத்த படத்தில் ஹீரோயினியாக ஐஸ்வர்யாவை புக் செய்ய உள்ளதாகவும் கூறினார். இதனை கேட்ட ஐஸ்வர்யா மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார்.

நடிகை ஐஸ்வர்யா இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறவில்லை. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், ஐஸ்வர்யாவுக்கு இனி அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்