ஆப்நகரம்

முதன் முறையாக சிம்பு குரலில் பாடல் ஒலிப்பதிவு செய்த அனிருத்

சிம்பு, அனிருத் இடையே 'பீப் பாடல்' விவகாரம் காரணமாக பல்வேறு சிக்கல் இருந்தபோதிலும், தற்போது முதன் முறையாக சிம்பு குரலில் ஒரு பாடலை அனிருத் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

TNN 8 Sep 2016, 7:00 pm
சென்னை: சிம்பு, அனிருத் இடையே 'பீப் பாடல்' விவகாரம் காரணமாக பல்வேறு சிக்கல் இருந்தபோதிலும், தற்போது முதன் முறையாக சிம்பு குரலில் ஒரு பாடலை அனிருத் ஒலிப்பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil simbu records his first official song for anirudh
முதன் முறையாக சிம்பு குரலில் பாடல் ஒலிப்பதிவு செய்த அனிருத்


அனிருத் இசையமைக்கும் 'ரம்' படத்தில் இடம்பெறும் 'பேயோபோபிலியா' எனும் பெப்பி பாடலை சிம்பு பாடியுள்ளார். ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதாஷெட்டி, விவேக், அம்ஸாத் இணைந்து நடித்துள்ள திகில் கலந்த பேய் படத்தில் சிம்பு பாடியுள்ளார். ஒரு வீட்டினுள் படத்தின் கதாப்பாத்திரங்கள் உணரும் பயம் கலந்த அனுபவத்தை குறிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்பாடல் சரியான குத்துப் பாடல். இந்த பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே சிம்புவின் குரல் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. ஆகையால் அவரிடம் பேசி பாட சம்மதம் வாங்கினோம் என்று அனிருத் கூறினார். பாடல் ஒலிப்பதிவின் போது மிகவும் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருந்தாக அனிருத் கூறியுள்ளார். முதன் முறையாக இசையமைப்பாளர் அனிருத் பேய் படம் ஒன்றுக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்