ஆப்நகரம்

எஸ்.பி.பி.க்காக இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்: சிம்பு உருக்கம்

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

Samayam Tamil 19 Aug 2020, 7:20 pm
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் தான் இருந்து வருகிறார் என சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
Samayam Tamil Simbu - SPB


இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை தொடர்ந்து critical ஆகவே இருந்துவருவதனால் அவர் விரைவில் அதில் இருந்து மீண்டு வர பல்வேறு பிரபலங்களுக்கு பிராத்தித்து வருகின்றனர். நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் பாரதிராஜா எஸ்பிபி-காக ஒரு கூட்டு பிரார்த்தனை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார். அதில் பங்கேற்க ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களை அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.

இனிநிலையில் நடிகர் சிம்பு எஸ்பிபி பற்றி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொள்ள ரசிகர்களையும் அவர் அழைத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது..

"உயிரினும்‌ மேலான ரசிகர்களுக்கும்‌, நண்பர்களுக்கும்‌, பாடல்‌ கேட்டு வாழும்‌ என்‌ போன்ற அனைத்து மக்களுக்கும்‌ வணக்கங்கள்‌. எத்தனையோ பேரை உயிர்த்த குரல்‌ அது. எத்தனையோ நாட்களைக்‌ கடந்தூவரச்‌ செய்த வரப்‌ பாடல்கள்‌ அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப்‌ பூர்வமாக உணர அவர்‌ பாடக்‌ கேட்டாலே போதும்‌. அற்புதங்களை தமிழ்‌ சினிமாவில்‌ நிகழ்த்திய பாடல்‌ ஆசான்‌ அவர்‌.

இன்று மருத்துவமனையிலிருந்தூ மீண்டு வரும்‌ வரத்திற்காய்‌ காத்திருக்கிறார்‌. நம்‌ வேண்டுதல்‌ என்னும்‌ ஒருமித்த எண்ணம்‌ அவரிடம்‌ அற்புதங்கள்‌ நிகழ்த்தி நம்மிடையே மீண்டும்‌ அழைத்து வர வேண்டும்‌. எஸ்‌ பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின்‌ மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்‌.

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக்‌ கொள்வது அவசியம்‌. அவர்கள்‌ பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம்‌ கெஞ்சிக்‌ கேட்டு மீட்டு வரவேண்டும்‌. நம்‌ 'பாடும்‌ நிலா' எழுந்து வரவேண்டி நம்‌ இயக்குநர்‌ இமயம்‌ பாரதிராஜா அவர்கள்‌ முன்னெடுப்பின்படி, நாளை 20-ம்‌ தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம்‌ அனைவரும்‌ எஸ்‌ பி பி அவர்களின்‌ பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக்‌ கொள்ள கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

வேண்டுதலின்‌ பலனாய்‌ அவர்‌ மீண்டு வருவார்‌ என்ற நம்பிக்கையோடு உங்களில்‌ ஒருவனாய்‌...

அன்புடன், சிலம்பரசன் TR

இவ்வாறு அந்த அறிக்கையில் சிம்பு கூறி உள்ளார்.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட சில பிரபலங்கள் இந்த கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்கும்படி ரசிகர்ளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாடகர் எஸ்பிபி அவர்கள் வேகமாக குணமடைய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்வோம். 20 ஆகஸ்ட் மாலை 6 மணிக்கு நடக்கும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். அவர் குரல் மீண்டும் ஒலிப்பதை உறுதி செய்வோம்" என ஜிவி பிரகாஷ் பதிவிட்டு இருந்தார்.

பாரதிராஜா ஏற்பாடு செய்திருக்கும் இந்த பிரார்த்தனையில் பிரபலங்கள் அவர்கள் வீடுகளில் இருந்தே பங்கேற்க உள்ளனர். கொரோனா காரணமாக ஒரு இடத்தில் கூடுவது சிக்கல் என்பதால் தான் இப்படி செய்யப்படுகிறது. ரஜினி கமல் உட்பட சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்