ஆப்நகரம்

படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த சிம்பு

‘இது நம்ம ஆளு’ படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 6 Jun 2016, 6:27 pm
‘இது நம்ம ஆளு’ படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil simbu say thanks to idhu namma aalu team
படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த சிம்பு


பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினருக்கு சிம்பு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இது நம்ம ஆளு’. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்த படத்துக்கு குறளரசன் இசையமைத்தார். டி.ராஜேந்தர் வழங்க முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்தார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் மே 27ம் தேதி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூலில் குறை வைக்கவில்லை. இப்படத்தில் நாயகனாக நடித்த சிம்பு, படக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். “’இது நம்ம ஆளு’ படத்திற்கு கிடைத்த அருமையான வரவேற்புக்கும், வெற்றிக்கும் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமானது. நீங்க இல்லாம நான் இல்ல. இதுக்குக் காரணமான ஒட்டுமொத்த அணிக்கும் எனது நன்றி. எனது ரசிகர்கள் என் மீது காட்டிய அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்’’ என்றார் சிம்பு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்