ஆப்நகரம்

டேக் முடிந்த பின்னும் கதறி அழுத சிம்பு: மாநாடு திரைப்படம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!

மன்மதன் திரைப்படத்திற்கு பிறகு மாநாடு திரைப்படத்தில் தான் ஒரு குறிப்பிட்ட காட்சியில் டேக் முடிந்த பின்பும் தொடர்ந்து அழுததாக தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.

Samayam Tamil 23 Jun 2021, 11:05 pm
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் இந்த படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டின் போது, மாநாடு படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் படம் குறித்து பேசியவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Silambarasan
Silambarasan


சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி 'மாநாடு' திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் 'மெர்ஸைலா' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. பாடல்வெளியீட்டின் போது மாநாடு படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் கலந்து படம் குறித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் தந்த தயாரிப்பாளர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!
அப்போது பேசிய நடிகர் சிம்பு, இந்த படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நீளமான ஒரு காட்சியில் நடித்ததாகவும் அப்போது மன்மதனில் மொட்டை மதன் அழும் காட்சி நினைவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்னு அடிக்கணும். ஆனா இப்ப அந்த காட்சிக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது. காட்சி முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சு கூட அழுகைய நிப்பாட்ட முடியலை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு. மேலும் இந்த காட்சியை படமாக்கியதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த கலந்துரையாடலில் எஸ்.ஜே.சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்