ஆப்நகரம்

Simbu: மலேசியாவில் தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் மாநாடு படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Samayam Tamil 4 Jun 2019, 3:42 pm
சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் சிம்பு. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி அடையவில்லை.
Samayam Tamil மாநாடு படப்பிடிப்பு தொடக்கம்
மாநாடு படப்பிடிப்பு தொடக்கம்


அதை தொடர்ந்து ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ என்கிற படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. அதனுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’மகா’ படத்தில் சிம்பு தோன்றும் காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், அவர் சில நாட்கள் ஓய்வில் இருந்து வந்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது. சிம்பு மற்றும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கல்யாணி பிரியதர்ஷன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.

அரசியல் பின்னணியில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில், வெங்கட் பிரபுவுக்கே உரித்தான நகைச்சுவை காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது. படத்திற்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்