ஆப்நகரம்

சிம்பு தாமதமாக வருகிறாரா? மாநாடு தயாரிப்பாளரின் கோபமான அறிக்கை!

சிம்பு மாநாடு ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருகிறார் என செய்தி பரவியது. அது பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 6 Mar 2020, 6:00 pm
நடிகர் சிம்பு பற்றி தவறான செய்திகள் இதற்கு முன்பு பல வந்திருக்கின்றன. ஆனால் அவர் மாறிவிட்டார், ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக நேரத்திற்கு வந்து நடித்து கொடுக்கிறார் என தயாரிப்பாளர்களே கூறினாலும் யாரும் கேட்பதாக இல்லை, அவரை பற்றி தவறான செய்திகள் தான் மீண்டும் மீண்டும் பரவுகிறது.
Samayam Tamil Simbu Maanaadu producer Suresh Kamatchi


மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்கு மீண்டும் சிம்பு தாமதமாக தான் வருகிறார் என செய்திகள் வெளியானது. மேலும் அடுத்து ஹைதராபாத்தில் நடக்கவுள்ள ஷூட்டிங்கிற்கு வர மறுக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. அதுமட்டுமின்றி சிம்பு இரண்டு கேரவன் கேட்கிறார் என்றும் கூறப்பட்டது.

இத்தகைய செய்திகள் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோபமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "சிம்பு ஒரு நாள் கூட தாமதமாக வரவில்லை. வராமல் தவிர்த்ததும் இல்லை. தன்னுடைய காட்சி எடுத்து முடியும் வரை கேரவன் போகாமல் அங்கேயே குடை பிடித்து கொண்டு நிற்கிறார். நாளை மறுநாளிலிருந்து ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது. அப்போ சிம்பு இல்லாமலா ஷூட்டிங் எடுக்கப் போகிறோம்?. இரண்டு கேரவன் கேட்டார் என செய்தி வெளியிடுகிறார்கள்."


"சிம்புவை பற்றி உங்களுக்கு இருக்கும் தவறான அபிப்பிராயங்களை கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் செய்யுங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரை பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே" என கேட்டுகொன்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்