ஆப்நகரம்

சமூக வலைத்தளத்தில் வெடித்த சர்ச்சை பேச்சு: மருத்துவரின் மன்னிப்பை ஏற்க மறுக்கும் சின்மயி!

தன்னை பற்றிய தனிப்பட்ட தகவலை பொது வெளியில் பேசிய மருத்துவர் அரவிந்த் ராஜ் மீது சட்டரீதியான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2021, 10:12 am
ட்விட்டரில் பிரபலமான ஸ்பேசை தொடர்ந்து தற்போது கிளப் ஹவுஸ் எனப்படும் சமூக வலைதளமும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திரையுலக பிரபங்களும், நெட்டிசன்களும் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த உரையாடல் நிகழ்ச்சியில் பாடகி சின்மயி பற்றி அவதூறாக பேசிய மருத்துவர் ஒருவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் பாடகி சின்மயி.
Samayam Tamil Chinmayi_Sripada
Chinmayi_Sripada


கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்மயி பற்றியும் அவர் வைரமுத்து மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பற்றியும் கிளப் ஹவுஸில் பேசப்பட்டு வந்தது. அப்போது குழுவில் பேசிய மருத்துவர் அரவிந்தராஜ் என்பவர், பாடகி சின்மயி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அவர் எந்த மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுகிறார் என்றும் அவருடைய மன நலன் பற்றியும் தனக்கு தெரியும் எனவும் பேசினார்.

விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும் ஆண்டவர்!
அதனைத் தொடர்ந்து அந்த குழுவில் பாடகி சின்மயியும் இணைக்கப்பட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. தன்னுடைய தனிப்பட்ட விவகாரங்கள் பொது வெளியில் பேசுவது ஏன் என்று சின்மயி கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் அரவிந்தராஜ் குழுவில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் மருத்துவர் அரவிந்த் ராஜ் சின்மயி தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்காததால், அவருடைய தாயாரிடம் 20 நிமிடங்கள் பேசி மன்னிப்பு கேட்டதாகவும் தன்னுடைய பேஸ்புக்கில் கூறியிருக்கிறார் மருத்துவர். மேலும் இரவு மது அருந்திவிட்டு தவறாக பேசி விட்டதாக ஒரு விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறார். ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்று கொள்ளாத சின்மயி, டாக்டர் அரவிந்த் ராஜ் மீது புகார் அளிப்பதில் திட்டவட்டமாக உள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்