ஆப்நகரம்

தன்னுடைய டப்பிங் சம்பளத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பாடகி!

பிரபல பாடகி சின்மயி, ஒரு படத்துக்கு டப்பிங் பேசியதன் மூலம் வந்த சம்பளத்தை அப்படியே கேரள மக்களுக்காக வழங்கியுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2018, 6:00 pm
பிரபல பாடகி சின்மயி, ஒரு படத்துக்கு டப்பிங் பேசியதன் மூலம் வந்த சம்பளத்தை அப்படியே கேரள மக்களுக்காக வழங்கியுள்ளார்.
Samayam Tamil CHINMAYI


பிரபல பாடகி சின்மயி, பாடல்களை பாடுவதுடன், நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் உள்ள ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

தற்போது கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளுக்காக பலரும் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிவரும் நிலையில் சின்மயி தான் தெலுங்கு படம் ஒன்றிற்கு டப்பிங் பேசியதன் மூலம் வந்த சம்பளத்தை அப்படியே கேரள மக்களுக்காக கொடுத்தள்ளார். இதனால் பாடகி சின்மயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இது தனக்கு சென்னை வெள்ளத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வந்த மீனவர்களுக்கு வெள்ள நீர் வடிந்த பிறகு படகை மீண்டும் அவர்கள் இடத்துக்கு கொண்டு செல்ல யாரும் உதவமுன்வரவில்லை. தற்போதும் யாரும் திருந்தவே இல்லை, ஏரி குளங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர்” என தெரிவித்து சின்மயி பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்