ஆப்நகரம்

மகனுக்காக அரசிடம் கண் கலங்கி கோாிக்கை வைக்கும் பரவை முனியம்மா

தனக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை என் மரணத்திற்கு பின்னா் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள என் மகனுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளாா்.

Samayam Tamil 4 Mar 2019, 5:07 pm
தனக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை என் மரணத்திற்கு பின்னா் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள என் மகனுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளாா்.
Samayam Tamil Paravai Muniyamma


நாட்டுப்புற பாடகியும், குணச்சித்திர நடிகையுமான பரவை முனியம்மாவிற்கு சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. இதற்காக மகிழ்ச்சி தொிவித்துள்ள அவா் அரசுக்கு ஒரு கோாிக்கையை வைத்துள்ளாா்.

அவா் வைத்துள்ள கோாிக்கையில், “நான் வறுமையில் வாடியபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 6 லட்சம் ருபாய் வைப்புநிதி அளித்து உதவினார். அதன்மூலம் மாதம் 6 ஆயிரம் ருபாய் வட்டி கிடைக்கிறது.

மொத்தமா எனக்கு 6 குழந்தைகள். கடைசி பையன் மூளை வளர்ச்சி இல்லாதவர். அவருடன் தான் நான் தற்போது வசித்து வருகிறேன். என் கணவர் இறந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனக்கு பிறகு அந்த உதவி தொகையை தன் மகனுக்கு வழங்கவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்