ஆப்நகரம்

பாமாட்டேன் என்றவர் மீண்டும் பாடிய அதிசயம்!

இனிமேல் பாடமாட்டேன் என்ற கொள்கையில் இருந்து தற்போது விலகி மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார் பாடகி ஜானகி.

Samayam Tamil 11 Dec 2018, 4:43 pm
பாடகி ஜானகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார். இவர் 1950-களின் இறுதியில் தொடங்கி 1980, 1990-களில் உச்சத்தில் இருந்தார். இவரது கொஞ்சும் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.
Samayam Tamil janaki


தற்போது பாடகி ஜானகிக்கு 80 வயதாகிறது. இனி சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதில்லை என கடந்தாண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இதுநாள் வரை அவர் எந்தப் படத்திலும் பாடாமல் ஐதராபாத்தில் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில் தனது கொள்கையையில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் பாட வந்துள்ளார். டி.ஆர்.பழனிவேலன் என்பவர் இயக்கும் ‘பண்ணாடி’ என்ற படத்தில் பாடகி எஸ்.ஜானகி ஒரு பாடலை பாடியுள்ளார்.

‘பண்ணாடி’ படத்தில் ஆர்.வி.உதயகுமார், வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இதை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழனிவேலன் தயாரிக்கிறார். படத்திற்கு ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

ஜானகி மீண்டும் பாட வந்தது குறித்து இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் கூறுகையில், ‘‘.ஜானகி அம்மாவை நாங்கள் பாட அணுகிய போது, அவர் புதியவர்களுக்கு பாட வாய்ப்பு கொடுங்கள் என்றார். இந்தப் பாடலை நீங்கள்தான் பாட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்