ஆப்நகரம்

விஜய்யின் 'வெறித்தனம்' பாடல் பாடகி திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்..!

46 வயதான பாடகி சங்கீதா சஜித்தின் திடீர் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 23 May 2022, 7:31 am
கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகியான சங்கீதா சஜித், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். சிறுவயது முதலே சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கர்நாடக சங்கீதமும் கற்றவர்.
Samayam Tamil Sangeetha Sajith
Sangeetha Sajith


தமிழில் தொடக்க காலத்தில் தேவா, சிற்பி, கீரவாணி, ஆதித்யன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார். விருது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சங்கீதா அதில் கே.பி சுந்தராம்பாள் பாடிய பாப்புலர் பாடலான ‘ஞானப்பழத்தை பிழிந்து’ எனும் பாடலைப் பாடினார். இது அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மிகவும் பிடித்து போனதை தொடர்ந்து தான் இசையமைத்த மிஸ்டர் ரோமியோ எனும் படத்தில் பாட வாய்ப்பளித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ என அவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதன் பிறகு பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘வாராயோ தோழி’ பாடலில் பாடல் தொடக்கத்தில் வரும் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ எனத் தொடங்கும் வரிகளையும் இவர்தான் பாடினார்.

'விடுதலை' பட அப்டேட்டை வெளியிட்ட விஜய் சேதுபதி: தீயா இருக்கே..!
சமீபத்தில் வந்த விஜய்யின் பிகில் படத்தில் மூதாட்டி பாடுவது போல இடம்பெற்றிருந்த ‘யாராண்ட’ எனத் தொடங்கும் வரிகளைப் பாடியதும் சங்கீதாதான். யாரும் நம்ப முடியாத அளவிற்கு வித்தியாசம் கொடுத்து பாடியிருப்பார்.

இந்நிலையில் சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்த பாடகி சங்கீதா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டில் காலமானார். 46 வயதான சங்கீதாவின் திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்