ஆப்நகரம்

”ப்ளீஸ்..!என்னை விட்டுடுங்க”-ஹேக்கர்களிடம் பாடகி சுசித்ரா வேண்டுகோள்..!

தன்னுடைய டிவிட்டர் கணக்கை விட்டுவிடுமாறு ஹேக்கர்களிடம் பாடகி சுசித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 4 Mar 2017, 10:41 am
தன்னுடைய டிவிட்டர் கணக்கை விட்டுவிடுமாறு ஹேக்கர்களிடம் பாடகி சுசித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil singer suchitra request hackers to leave her
”ப்ளீஸ்..!என்னை விட்டுடுங்க”-ஹேக்கர்களிடம் பாடகி சுசித்ரா வேண்டுகோள்..!


கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் வரக்கூடிய டிவீட்கள் ஒவ்வொன்றும் ‘பகீர்’ ரகமாக இருக்கிறது.இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும்,தன் டிவிட்டர் கணக்கை தயவு செய்து விட்டுவிடுமாறும் பாடகி சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்த பிரச்சனைகள் குறித்து நான் பல காவல் நிலையத்தில் உதவி கேட்டேன்.ஆனால் யாரும் உதவவில்லை.காவல்நிலையத்தில் நேரில் சென்று புகார் அளிக்கும் சூழலிலும் நான் இல்லை.என்னுடைய டிவிட்டர் கணக்கை யார் ஹேக் செய்தது என்பதை தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் ஆராய்ந்தேன்.அதில் ஹேக்கிங் செய்வதை வேலையாகச் செய்யும் ஒரு தனியார் நிறுவனம்தான் இதனை செய்தது தெரியவந்திருக்கிறது.

நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரே விஷயம்தான்.என்னை விட்டுவிடுங்கள்.நடிக,நடிகைகள் குறித்து நல்லதோ,கெட்டதோ நான் எப்போதும் சொன்னதில்லை.”என சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

Singer suchitra request hackers to leave her

அடுத்த செய்தி

டிரெண்டிங்