ஆப்நகரம்

பத்மநாப ஸ்வாமி கோவிலில் நுழைய அனுமதி கோரிய பாடகர் யேசுதாஸ்!

புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகரும், பின்னணிப் பாடகருமான யேசுதாஸ், மிகவும் பழமை வாய்ந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் நுழைய அனுமதி கேட்டுள்ளார்.

TNN 17 Sep 2017, 8:48 pm
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகரும், பின்னணிப் பாடகருமான யேசுதாஸ், மிகவும் பழமை வாய்ந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் நுழைய அனுமதி கேட்டுள்ளார்.
Samayam Tamil singer yesudas seeks entry into padmanabhaswamy temple
பத்மநாப ஸ்வாமி கோவிலில் நுழைய அனுமதி கோரிய பாடகர் யேசுதாஸ்!


இதுதொடர்பாக பத்மநாப ஸ்வாமி கோவில் நிர்வாகம் கூறுகையில், பிறப்பால் கிறிஸ்துவரான யேசுதாஸ், இந்து சமயத்தின் மீதான ஈடுபாட்டை முன்மொழிந்து சிறப்பு அனுமதி கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கோவில் நிர்வாக அதிகாரி வி.ரதீசன், ஐ.ஏ.எஸ் தெரிவிக்கையில், எந்த ஒரு குறிப்பிட்ட தேதியையும் யேசுதாஸ் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

இந்து சமயத்தின் மீதான நம்பிக்கை கொண்ட எவரும், கோவிலிற்கு வருகை புரியலாம் என்றும், அதற்கு எந்தவித தடைகளும் இல்லை என்றும் கூறினார். வரும் 30ஆம் தேதி விஜயதசமி நாளை ஒட்டி, யேசுதாஸ் கோவிலிற்கு வருகை புரிய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யேசுதாஸின் இந்து மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாகவே அறியலாம். தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் யேசுதாஸே அறிவித்துள்ளார். இதனால் அவர் கோவிலிற்கு வருகை புரிவதற்கு எந்தவித தடைகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உறுதி மொழி அளிக்கப்பட்டால் மட்டுமே இந்துக்கள் அல்லாதவர்களும், வெளிநாட்டவர்களும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் அனுமதிக்கப்படுவர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு செல்வதை யேசுதாஸ் வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 56 ஆண்டுகாலமாக பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடகராக உள்ளார்.

Singer Yesudas seeks entry into Padmanabhaswamy temple.

அடுத்த செய்தி

டிரெண்டிங்