ஆப்நகரம்

சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலைக்கு காரணம் சூழ்நிலை: நடிகர் சாய் சக்தி வேதனை

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலைக்கு காரணம் சூழ்நிலை தான் என்று நடிகர் சாய் சக்தி தெரிவித்துள்ளார்.

TNN 24 Dec 2016, 11:21 am
சென்னை: சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலைக்கு காரணம் சூழ்நிலை தான் என்று நடிகர் சாய் சக்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil situations made drama artists suicide says actor sai sakthi
சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலைக்கு காரணம் சூழ்நிலை: நடிகர் சாய் சக்தி வேதனை


தமிழ் சின்னத்திரை கலைஞர்களின் வேலைவாய்ப்பினை டப்பிங் சீரியல்கள் பாதிப்பதாக சின்னத்திரை நடிகர் சாய் சக்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் டப்பிங் சீரியல்களை தமிழ் சேனல்களில் 100 சதவிகிதம் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் ரசிகர்கள் டப்பிங் சீரியல்களில் ஏதோ புதுமை இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசிப்பதாக கூறியுள்ளார். அவர்களின் உடை, கூந்தல் அலங்காரம் ஆகியவற்றிற்காக பார்ப்பதாகவும், தமிழிலும் இதனை கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

டப்பிங் சீரியல்களின் காரணத்தால், தமிழ் சீரியல் நடிகர், நடிகைகள் பணப்பிரச்னையில் சிக்குவதாகவும், இது தற்கொலை வரை அவர்களை கொண்டு சென்று விடுவதாகவும் கூறினார். யாரும் விருப்பப்பட்டு இந்த முடிவை தேடிக் கொள்ளவில்லை என்றும், சூழ்நிலைகள் தான் காரணம் என்றும் சாய் சக்தி குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரை கலைஞர்களை தமிழ் தொலைக்காட்சிகள் காப்பாற்ற முடியும் என்று கூறினார். தமிழ் சின்னத்திரை கலைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு, வருமானம் இருந்தால் சீரியல் நடிகர், நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் நிகழாது என்றும் நடிகர் சாய் சக்தி கூறியுள்ளார்.

Situations made drama artists suicide says serial actor sai sakthi.

அடுத்த செய்தி

டிரெண்டிங்