ஆப்நகரம்

‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்து நானாக இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டேன்: சிவகார்த்திகேயன்!

‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்து இயக்குனர் மோகன்ராஜாவிடம் நானாக வாய்ப்பு கேட்டேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

TNN 7 Dec 2017, 4:37 pm
‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்து இயக்குனர் மோகன்ராஜாவிடம் நானாக வாய்ப்பு கேட்டேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Samayam Tamil siva karthikeyan talk about mohan raja
‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்து நானாக இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டேன்: சிவகார்த்திகேயன்!


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியபோது, ‘‘‘தனி ஒருவன்’ படம் பிடித்துபோனதால், இயக்குனர் மோகன் ராஜாவிடம் நானாக வாய்ப்பு கேட்டு நடித்த படம்தான், ‘வேலைக்காரன்’. பொதுவாக மோகன் ராஜா ரீமேக் படங்களை மட்டுமே இயக்குவார். ரீமேக் படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ரீமேக் படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், ரீமேக் படங்களில் நடிப்பது மிகவும் கஷ்டம் என்பதால் மறுத்து விட்டேன்.

ரஜினிகாந்த் நடித்த படம் ‘வேலைக்காரன்’. இந்த தலைப்பை என் படத்துக்கு வைத்தால் சரியாக இருக்குமா என்று தயங்கினேன். ஆனால், கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என்று ஆர்.டி.ராஜா சொன்னதால், இந்த தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து கேட்டு வாங்கி வைத்தோம்’’ என்றார் சிவகார்த்திகேயன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்