ஆப்நகரம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெடி !!

சிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பான "வாழ்" திரைப்படத்தின் படபிடிப்பு 75 நாட்களில் நிறைவு பெற்றுள்ளது. அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் "வாழ்" திரைப்பபடம் உருவாகியுள்ளது.

Samayam Tamil 17 Jul 2019, 9:51 am
தமிழின் முன்னனி நடிகராக வளர்ந்த பிறகு தன் நண்பர்களுக்கென்றே தயாரிப்பாளராக மாறினார் சிவகார்த்திகேயன். அவரின் முதல் தயாரிப்பான "கனா" திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களிடமும் வரவேற்பும் பெற்றது. அதைத் தொடர்ந்து தயாரித்த "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.அப்படத்தின் இசை வெளியீட்டில் தனது அடுத்த படமான "வாழ்" படத்தை அறிவித்தார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். தனது தந்தையின் பிறந்த நாளன்று தனது மூன்றாவது தயாரிப்பான "வாழ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
Samayam Tamil vikatan_2019-06_a8d53a75-541a-4fa3-a670-31f5bcfdca7e_D8IVMXuUYAYJbTy

வாழ்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சரியே: கமல்ஹாசன் ஆதரவு
அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் "வாழ்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. ப்ரஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல் நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது.

படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென சமூகவலைதளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு படம்தொடர்ப்பான சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர். 2019 ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை 75 நாட்கள் நூற்றிக்கும் மேற்ப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு இப்போது முழு முனைப்புடன் போஸ்ட்ப்ரொடக்ஸன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
அவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்!!

வாழ் படப்பிடிப்பு

பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள், ஆர்ப்பரிக்கும்ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய வெளி நாட்டு ராணுவவீரர்கள் என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர்படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது.

அருவி யைப் போலவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும்இப்படத்திற்காக, படக்குழு இதுவரை சினிமா கேமராவில்பதிவாகாத பல இடங்களுக்கு சென்று படப்பிடிப்புநடத்தியுள்ளதாக கூறப்படுக்கிறது.

வாழ்

நயன்தாராவுக்கு கல்யாணமா? உலகக்கோப்பை ஜோதிடர் என்ன சொல்லுறாரு?
வாழ் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை ஷெல்லியும், படதொகுப்பை ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவும், இசையை ப்ரதீப்குமாரும், கலை இயக்கத்தை ஸ்ரீராமனும்செய்கிறார்கள்.

முன்னதாக 2018ல், இப்படத்தின் இசைக் கோர்வைசேகரிப்புக்காகவும், இசைப் பதிவிற்காகவும் படக்குழு டல்லாஸ், சின்சினாட்டி, இஸ்தான்புல் என உலகின் பலநகரங்களுக்குச் சென்றது குறிப்பிடதக்கது. வெவ்வேறுநாட்டினைச் சேர்ந்த பல இசை கலைஞர்களின் பங்களிப்பு இப்பட்டத்தில்ட்டிபதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பல பாடல்கள் இருப்பதாகவும் கூடுதல் தகவல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்