ஆப்நகரம்

கனா படத்தால் ஏமாந்து போன சிவகார்த்திகேயன்: ஐஸ், சத்யராஜ் நடிப்பு பிரமாதம்!

கனா படம் மற்ற படங்களை விட குறைவான வசூல் குவித்ததால், சிவகார்த்திகேயன் வருத்தத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 28 Dec 2018, 7:24 pm
கனா படம் மற்ற படங்களை விட குறைவான வசூல் குவித்ததால், சிவகார்த்திகேயன் வருத்தத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil siva


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். குடும்பக் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தான், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட கனா படம் குறைவான வசூல் குவித்ததால், அவர் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும், வசூலில் பின் தங்கியுள்ளது. காரணம், அதே நாளில், மாரி 2, அடங்க மறு, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கேஜிஎஃப் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது தான். தற்போது வரை கனா படம் ரூ.18 கோடி வரையில் தான் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான், வசூல் பாதித்தாலும் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக பெண் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், சமூக அக்கறையை மையப்படுத்திய இப்படத்தில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம், பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜூம் நடித்துள்ளனர். இருவர் மட்டுமே படத்தில் முக்கியமான ஹீரோக்கள் என்றே சொல்லலாம். இவர்களது எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மேலும், படத்தில் விவசாயத்தையும் குறிப்பிட்டு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த 21ம் தேதி படம் வெளியாகாமல், 28ம் தேதி வெளியாகியிருந்தால், படத்திற்கு அதுவும் இந்த படத்திற்கு வசூலும் எகிறியிருக்கும், விமர்சனமும் எகிறியிருக்கும், ரசிகர்களின் வரவேற்பும் எகிறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்