ஆப்நகரம்

எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: எஸ்பிபி-க்கு சிவகார்திகேயன் இரங்கல்

பாடகர் எஸ்பிபி மறைவுக்கு சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

Samayam Tamil 25 Sep 2020, 5:18 pm
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மரணம் அடைத்தது சினிமா துறை நட்சத்திரங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருகிறது. அவர் குணமடைய வேண்டி ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் மரணம் அடைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil sivakarthikeyan condolence tweet to sp balasubrahmanyam
எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: எஸ்பிபி-க்கு சிவகார்திகேயன் இரங்கல்


நடிகர் சிவகார்த்திகேயன் தான் சிறு வயதில் இருந்தே எஸ்பிபியின் ரசிகன் என தனது இரங்கல் ட்விட்டில் கூறி இருக்கிறார்.

"இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்... இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் #RIPSPBSir" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.


மேலும் நடிகை சிம்ரன் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில், "திரு எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்ததை பற்றி அறிந்து அதிகம் சோகம் அடைந்து இருக்கிறேன். அவர் இல்லாமல் மியூசிக் அதே போல இருக்கப்போவதில்லை. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்