ஆப்நகரம்

'டாக்டர்' படத்திற்கு விடிவுகாலம்: ரசிகர்களுக்காக படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Samayam Tamil 10 Sep 2021, 9:09 am
சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பில் உள்ள படம் டாக்டர். நெல்சல் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு யுகங்கள் கிளம்பின. இந்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Doctor
Doctor


'கோலமாவு கோகிலா’ டத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கியுள்ள படம் ‘டாக்டர். இந்த படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரியங்கா மோகன். இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

'டாக்டர்' படம் முதலில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்ததால் பட வெளியீட்டை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர். அதனை தொடர்ந்து மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டனர் படக்குழுவினர்.

திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட 'யானை' பட போஸ்டர்: மிரட்டலான லுக்கில் அருண் விஜய்!
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. இதனிடையில் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் பரவியது. இதனை மறுத்த டாக்டர் படக்குழுவினர், படம் நிச்சயமாக திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதியளித்தனர்.


இந்நிலையில் கே.ஜி.ஆர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எல்லா யூகங்களையும் ஒதுக்கிவையுங்கள். சத்தமாக சிரிப்பதற்கு தயாராகுங்கள். அக்டோபர் மாதம் 'டாக்டர்' படம் திரையரங்குகளில் வெளியாகும். இந்த முடிவு ரசிகர்களுக்காகவும் அன்பான திரையரங்கு உரிமையாளர்களுக்காகவும் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். இந்த முடிவு சிவகார்த்திகேயன் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்