ஆப்நகரம்

தான் எழுதிய பாடலை மறைந்த நா.முத்துக்குமாருக்கு சமர்பித்த சிவகார்த்திகேயன்!

தனக்கு முதன் முதலாக பாடல் எழுதிய நா.முத்துக்குமாருக்கு, பாடலில் வந்த வருமானம் மூலம் சிவகார்த்திகேயன் நன்றி கடன் செலுத்தியுள்ளார்.

Samayam Tamil 18 Jul 2018, 5:19 pm
தனக்கு முதன் முதலாக பாடல் எழுதிய நா.முத்துக்குமாருக்கு, பாடலில் வந்த வருமானம் மூலம் சிவகார்த்திகேயன் நன்றி கடன் செலுத்தியுள்ளார்.
Samayam Tamil imgna-muthukumar


நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை ஹீரோயினியாக நடித்துள்ளார். இவருடன் யோகிபாபு, அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன், அருண் காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இதில், சிவகார்த்திகேயன் மட்டும் தனக்கு கொடுக்க நினைக்கும் சம்பளத்தை, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்கச் சொல்லிவிட்டார்.

இதற்கு காரணம், சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரினா’ படத்திற்கு நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியுள்ளாகர். அதனால் தான் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தப் பணத்தை நா.முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்