தமிழ் சினிமாவில் தினக்கூலியாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தன் பங்குக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்து பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பாதிப்பையும், பீதியையும் கிளப்பியுள்ளது. நாட்டில் கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுப் பொறுப்புடன் வீட்டிலேயே முடங்கி இருக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதனால் வேலைக்கு கூட செல்லாமல் பலர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனால், அவர்களின் வருமானம் கேள்விக் குறியாகியுள்ளது.
தமிழ் சினிமா தொழிலாளர்களும் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என தெரியாத நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஏற்கனவே, நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் தங்கள் நிறுவனம் சார்பில் 10 லட்சம் ரூபாய் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகுமார் குடும்பத்தினர் எனும் பெயரில் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரைத் தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பாதிப்பையும், பீதியையும் கிளப்பியுள்ளது. நாட்டில் கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுப் பொறுப்புடன் வீட்டிலேயே முடங்கி இருக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதனால் வேலைக்கு கூட செல்லாமல் பலர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனால், அவர்களின் வருமானம் கேள்விக் குறியாகியுள்ளது.
தமிழ் சினிமா தொழிலாளர்களும் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என தெரியாத நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஏற்கனவே, நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் தங்கள் நிறுவனம் சார்பில் 10 லட்சம் ரூபாய் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகுமார் குடும்பத்தினர் எனும் பெயரில் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரைத் தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளனர்.