ஆப்நகரம்

“என்னை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள்” : கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

“என்னை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள்” : கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

TOI Contributor 12 Oct 2016, 6:51 am
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியில் பல சாதனைகளை படைத்தவரும் ரெமோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தெரிவிக்கின்றனர். இதனால் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
Samayam Tamil sivakarthikeyan emotional speech at remo thanks giving event
“என்னை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள்” : கண்ணீர் மல்க சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!


அப்போது எல்லோருக்கும் வரிசையாக நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை பற்றி பேசும் போது அழுதுவிட்டார். ரெமோ திரைப்படம் வெளியாக பெரிதும் போராடியதாகவும், பலரும் படம் வெளியிட விடாமல் தொல்லை கொடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார். தன்னை வேலை செய்ய விடுமாறு கண்ணீர் மல்க அவ்வாறு செய்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்