ஆப்நகரம்

கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா சிவகார்த்திகேயன்!

இனி இப்படி நடக்காது, இனிமேல் அடிக்கடி உங்களை சந்திக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் வாக்கு கொடுத்துள்ளார்.

TNN 14 Oct 2017, 2:00 pm
இனி இப்படி நடக்காது, இனிமேல் அடிக்கடி உங்களை சந்திக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் வாக்கு கொடுத்துள்ளார்.
Samayam Tamil sivakarthikeyan gave promise to meet press regularly
கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா சிவகார்த்திகேயன்!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘வேலைக்காரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். படத்தை மோகன்ராஜா இயக்கி வருகிறார். தற்போது ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிவதற்குள் அடுத்து பொன்ராம் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தீபாவளிக்காக நேற்று சிவகார்த்திகேயன் அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், ‘நான் உங்களை சந்தித்து சுமார் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இனி இப்படி எப்போதும் நடக்காது, கண்டிப்பாக அடிக்கடி உங்களை சந்திப்பேன்’ என்று சிவகார்த்திகேயன் வாக்கு கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்