ஆப்நகரம்

சம்பளத்தை ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.8 கோடியாக்கிய சிவகார்த்திகேயன்!

பல முறை பஞ்சாயத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 80 லட்சம் சம்பளம் தற்போது 8 கோடியாக பேசி முடிக்கப்பட்டது.

Samayam Tamil 14 May 2018, 6:37 pm
பல முறை பஞ்சாயத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 80 லட்சம் சம்பளம் தற்போது 8 கோடியாக பேசி முடிக்கப்பட்டது.
Samayam Tamil sivakarthikeyan


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். படத்துக்கு விவேக் & மெர்வின் இசையமைக்கவுள்ளார்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில்சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க அக்ரிமென்ட் போடப்பட்டது. அவர் வளர்ந்து வரும் சமயத்தில் அவருடைய சம்பளம் 80 லட்சமாக இருந்தது. அதைத்தான் தயாரிப்பாளர் கொடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இந்தப் படத்துக்கு அக்ரிமெண்ட் போடப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்னை பஞ்சாயத்துக்குப் போனது. பலமுறை பஞ்சாயத்து நடந்தபிறகு, ஒருவழியாக நடித்துக் கொடுப்பதென முடிவு செய்துள்ளார்சிவகார்த்திகேயன். ஆனால், தன்னுடைய தற்போதைய சம்பளமான 15 கோடி ரூபாய் வேண்டும் என சிவகார்த்திகேயன் கராறாக கேட்டுள்ளார்.மீண்டும் பஞ்சாயத்து சென்று ஒரு வழியாக பேசி முடிவில் 8 கோடி ரூபாய்க்கு இறங்கி வந்து நடிக்க சம்மதித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்