ஆப்நகரம்

கொரோனா நிவராண நிதிக்கு எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்?: விபரம் இதோ

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் நிதி வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 16 May 2021, 8:24 am
முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்கி வருகிறார்கள்.
Samayam Tamil sivakarthikeyan jayam ravi vetrimaaran contribute towards tncm public relief fund
கொரோனா நிவராண நிதிக்கு எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்?: விபரம் இதோ


சூர்யா

கொரோனாவின் இரண்டாம் அலையால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை கேட்டுக் கொண்டார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதி வழங்கி வருகிறார்கள். ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதும் முதல் ஆளாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ரூ. 1 கோடி நிதி வழங்கினார்கள்.

அஜித்

அஜித் ரூ. 25 லட்சம் நிதி அளித்துள்ளார். மேலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ரூ. 25 லட்சம் நிதி அளித்திருக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தன் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சம் நிதி அளித்திருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறன் ஸ்டாலினை சந்தித்து ரூ. 10 லட்சம் கொடுத்திருக்கிறார்.

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் ராஜா மற்றும் தந்தை எடிட்டர் மோகனுடன் சென்று முதல்வர் ஸ்டானிடம் ரூ. 10 லட்சம் நிதி அளித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன்

நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ. 25 லட்சம் நிதி அளித்திருக்கிறார். அப்பொழுது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். முதல்வரிடம் அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ழு)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்