ஆப்நகரம்

சூர்யாவை தொடர்ந்து சதீஷ் படத்திலும் அந்த சம்பவம் செய்யும் சிவகார்த்திகேயன்!

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் 'நாய் சேகர்' படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்று எழுதியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2021, 11:40 am
தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் சதீஷ். சில மாதங்களுக்கு முன்பாக இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'நாய் சேகர்' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. சென்னையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
Samayam Tamil Naai Sekar
Naai Sekar


கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப்ப்டத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பிட்டுப் படப்பிடிப்பை நடத்தி வந்தனர் படக்குழு.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்நிலையில் 'நாய் சேகர்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருப்பதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்திருப்பதாகவும் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

காதலர் தினத்தை டார்கெட் செய்யும் 'டான்': உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணிபுரிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சதீஷின் ’நாய் சேகர்’ படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் ’பீஸ்ட்’, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' உள்பட ஒரு சில படங்களுக்கு சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்