ஆப்நகரம்

படத்தின் லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு: நடிகர் சிவகார்த்திகேயன்!

‘கனா’ படத்தின் லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Jan 2019, 1:55 pm
சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் ‘கனா’. இந்தப் படம் பெண்களுக்கான கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் நடிகரும், படத் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பு படமான ‘கனா’ படத்தின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு அளிக்கப்படும் என்றார்
Samayam Tamil kanaa


‘கனா’ வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘’கனா’ திரைப்படம் நான்கு முக்கிய படங்களுடன் வெளிவந்தது. ஹீரோ இல்லாத இந்த படத்தை இந்த போட்டியில் வெளியிட வேண்டுமா? என்று சிலர் என்னிடம் கூறினர். ஆனால் எனக்கு அருண்காமராஜ் மீது இருந்த நம்பிக்கையால் இந்த படத்தை தைரியமாக வெளியிட்டேன். படமும் வெற்றி பெற்றது இந்த படத்தில் கிடைத்த லாபத்தின் ஒரு பங்கினை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அறிவிப்போம்’’ என்றார் சிவகார்த்திகேயன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்