ஆப்நகரம்

விக்ரமை வைத்து இயக்க விரும்பும் சிவகார்த்திகேயன்!

ஒரு விழாவில் நடிகர் விக்ரமை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க விரும்புவதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Samayam Tamil 28 Jan 2019, 4:46 pm
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த நடிகர்களுள் ஒருவர். அவர் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போதுகூட ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil siva-vikram


இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு நடிகர் விக்ரம் உட்பட பல நடிகர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் விக்ரமும், சிவகார்த்திகேயனும் இணைந்து நிகழ்ச்சியை சிறிது நேரம் தொகுப்பாளர்களாக மாறி தொகுத்து வழங்கினர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம், மேடையில் பேசும்போது ஒருநாள் சிவகார்த்திகேயன் இயக்குனராக மாறுவர் என்று கூறினார். அதற்கு சிவகார்த்திகேயன், சீயானை வைத்து படம் இயக்க ஆசை உள்ளது. அப்படி இயக்கினால் அது டபுள் ஆக்ஷன் அல்லது மூன்று கேரக்டர் கொண்ட படமாகத்தான் இருக்கும் என்றார் சிவகார்த்திகேயன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்