ஆப்நகரம்

ஹீரோ படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு நன்றி சொன்ன இயக்குநர் பிஎஸ் மித்ரன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இயக்குநர் பிஎஸ் மித்ரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Nov 2019, 4:29 pm
இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹீரோ. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் இணைந்து அபாய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Samayam Tamil ஹீரோ படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு நன்றி சொன்ன இயக்குநர் பிஎஸ் மித்ரன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இயக்குநர் பிஎஸ் மித்ரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இவர்களது நடிப்பால் மெய்சிலிர்த்தேன்: விஜய் சேதுபதி

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் வெளியானது. இதையடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் படக்குழுவினருடன் இணைந்து இயக்குநர் பிஎஸ் மித்ரன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இந்த அற்புதமான படத்தில் அயராது உழைத்த அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Jayalalithaa Biopic: உடல் எடையை அதிகரிக்க ஹார்மோன் மாத்திரை எடுத்துக்கொண்டேன்: கங்கனா ரனாவத்!

வரும் 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது என்று கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த நம்ம வீட்டுப்பிள்ளை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை புகழ் இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

மாமா மகளுக்கு டிசம்பர் 6 நிச்சயதார்த்தம்: விஜய் எத்தனை நாள் சென்னையில் இருப்பார் தெரியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்