ஆப்நகரம்

சுவீடன் நாட்டு திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் வஸந்த் படம்!

இயக்குனர் வஸந்த், தயாரித்து இயக்கியுள்ள படம் தற்போது சுவீடன் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

Samayam Tamil 31 Jan 2019, 2:23 pm
‘கேளடி கண்மணி’ என்ற முதல் படம் மூலம் தனது இயக்குனர் பணியை தொடங்கியவர் வஸந்த். அதையடுத்து அவர் விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றி கண்டவர். தற்போது அவர் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’.
Samayam Tamil sivaranjani


பிரபல நாவல் எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகைகள் பார்வதி, லட்சுமி ப்ரியா மற்றும் நடிகர்கள் சந்திரமவுலி, கருணாகரன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரின் பாராட்டைப் பெற்றது. மேலும் புனே திரைப்பட விழாவில் பங்கேற்று அங்கும் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், அடுத்தப்படியாக சுவீடன் நாட்டு திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. அங்கு இந்தப் படம் பலரின் முன்னிலையில் திரையிடப்படவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்