ஆப்நகரம்

சினிமாவில் இருக்கவே தகுதியற்றவன்: 'ஜெய் பீம்' பார்த்துவிட்டு எமோஷனலான எஸ்.ஜே. சூர்யா!

சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்துள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 8 Nov 2021, 11:45 am
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சூர்யாவின் 39வது படமான இந்தப்படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் 'ஜெய் பீம்' படத்தை தயாரித்துள்ளது.
Samayam Tamil SJ Surya
SJ Surya


'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

நல்ல சேதி சொன்ன ஜி.வி. பிரகாஷ்: உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா 'ஜெய் பீம்' படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'ஜெய்பீம் படத்தை பார்த்து விட்டேன். உண்மையான கதாநாயகன் முன்னாள் நீதிபதி சந்துருவை நடிகர் சூர்யாவும், இயக்குனர் ஞானவேல் சாரும் பெருமைப்படுத்தியுள்ளனர்.


இந்தப் படத்தை பார்க்காமல் யாரும் இருந்தால் தயவு செய்து பாருங்கள். ஜெய்பீமை பார்த்து விட்டு அதைப் பாராட்டி ட்வீட் செய்யாமல் இருந்தால் நான் சினிமாவில் இருக்கவே தகுதியற்றவனாக பீல் பண்ணுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அவர் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்