ஆப்நகரம்

கோலிவுட்டில் வில்லன் இடத்தை நிரப்பும் எஸ்.ஜே.சூர்யா!

கோலிவுட்டில் பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்ததால்அந்த இடத்தைப் பிடிக்க நினைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

TNN 7 Aug 2017, 3:55 pm
கோலிவுட்டில் பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்ததால்அந்த இடத்தைப் பிடிக்க நினைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
Samayam Tamil sj surya will play a fultime villain role in kollywood
கோலிவுட்டில் வில்லன் இடத்தை நிரப்பும் எஸ்.ஜே.சூர்யா!


தமிழ் சினிமாவில் தற்போது நிரந்தர வில்லன் யாரும் இல்லை. ஒரு காலகட்டத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்தார். அவரும் தற்போது தன்னுடைய வில்லத்தனத்தை குறைத்துக் கொண்டு வருகிறார். ஆகையால் கோலிவுட்டில் நிரந்தர வில்லன் யாரும் இல்லை. அந்த இடத்தை தற்போது எஸ்.ஜே.சூர்யா பிடிக்க நினைக்கிறார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இயக்கிய ‘வாலி’, ‘குஷி’ என்ற இரண்டு படங்கள் ஹிட்டானது. அதன் பின் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. ஆகையால் தன்னைத்தானே இயக்கிக்கொண்டு தன் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அத்துடன் வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் அவரது மார்க்கெட் சரிந்து விட்டது.

இந்தநிலையில், தற்போது படம் இயக்குனர் தொழிலை ஓரங்கட்டிவைத்து விட்டு, முழுநேர நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. சில படங்களில் நாயகனாக நடித்துள்ள போதும், விஜய்யின் ‘மெர்சல்’, மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ ஆகிய படங்களில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படுபயங்கரமாக இருக்குமாம்.
அதனால் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது அவரது வில்லன் மார்க்கெட் ஏறிவிடும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் இறங்கியதை அடுத்து கோலிவுட்டில் சரியான வில்லன் இல்லாதநிலையில், அந்த இடத்தை எஸ்.ஜே.சூர்யாதான் பிடிப்பார் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்