ஆப்நகரம்

அடுத்தப் படத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்!

‘சீமராஜா’ படத்தைத் அடுத்து இன்று தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Samayam Tamil 12 Jul 2018, 6:42 pm
‘சீமராஜா’ படத்தைத் அடுத்து இன்று தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
Samayam Tamil Siva-Rajesh


கடந்த சில மாதங்களாக நடிகர் சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.

‘சீமராஜா’ படத்தின் போதே இவர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்