ஆப்நகரம்

“தலைவன் இருக்கிறான் வாடா”: கமலை அரசியலுக்கு அழைக்கும் சினேகன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து சினேகன் பாடல் பாடியுள்ளார்.

TNN 23 Sep 2017, 10:27 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து சினேகன் பாடல் பாடியுள்ளார்.
Samayam Tamil snehan write a lyrics based on kamalhaasans political entry
“தலைவன் இருக்கிறான் வாடா”: கமலை அரசியலுக்கு அழைக்கும் சினேகன்?


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் தொடர்ந்து அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருகிறார். இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் மக்களிடம் உங்களது கையில் தான் வெற்றி உள்ளது. அது உங்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பா? ஏன் ஜெயிப்பார்கள் என்றும், மற்றவர்கள் ஏன் ஜெயிக்க கூடாது என்றும் ஏடா, கூடாமாக கேள்வி எழுப்பினார்.



இந்த நிலையில், வழக்கம் போல் பாடகர் சினேகன் கமலைப் பற்றி ஒரு பாடல் எழுதியிருந்த நிலையில், அதனை கமல் முன்பு பாடி காட்டினார். அந்தப் பாடல் வரிகள் ”தலைவன் இருக்கிறான் வாடா” என்று கமலின் அரசியல் பயணம் நிறைந்ததாகவும், அவர் தலைவனாக வருவது பற்றியும் இருந்துள்ளது. இந்த நிலையில், சினேகன் மறைமுகமாக கமலை அரசியல் அழைக்கும் விதமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்