ஆப்நகரம்

லிங்கா பட நாயகி மீது பணமோசடி வழக்கு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹா மீது தனியாா் நிறுவனம் ஒன்று காவல் நிலையத்தில் மோசடி புகாா் அளித்துள்ளது.

Samayam Tamil 25 Feb 2019, 5:38 pm
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹா மீது தனியாா் நிறுவனம் ஒன்று காவல் நிலையத்தில் மோசடி புகாா் அளித்துள்ளது.
Samayam Tamil Sonakshi Sinha


இந்தி நடிகா் சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவா். தமிழில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தாா். இந்த படத்திற்கு பின்னா் தமிழில் எந்தப் படத்திலும் அவா் நடிக்கவில்லை.

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா மீது மொராதாபாத்தைச் சோ்ந்த “இந்தியா பேஷன் அனட் பியூட்டி” நிறுவனத்தின் உரிமையாளா் பிரமோத் சா்மா காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

அந்த மனுவில், சோனாக்ஷி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 30ம் தேதி இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களிடம் ரூ.37 லட்சம் பணம் பெற்றிருந்தாா். அவருக்கு நான்கு தவணைகளில் பணம் வழங்கப்பட்டது.

பணத்தை பெற்றுக் கொண்டு அவா் நிகழ்ச்சிக்கு வரவில்லை. சோனாக்ஷி சின்ஹா வராததால் எனது நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பணத்தைத் திருப்பித் தருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கோாிக்கை வைத்தனா். ஆனால் அவா் பணத்தைத் திருப்பித் தர மறுத்ததாக தொிகிறது. எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

சோனாக்ஷி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை மொராதாபாத் காவல்துறை துணை கண்காணிப்பாளா் கஜ்ராஜ் சிங் உறுதிப்படுத்தியுள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்